search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் பூத்"

    மகாராஷ்டிராவில் பெண் வாக்காளர்களின் வாக்குகளை கவர, அம்மாநில தேர்தல் ஆணையம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. #WomenWorkersBooths
    மும்பை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் நாட்டின் அனைத்து கட்சியினரும் பிரசாரம், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றில் கலந்துக் கொண்டு உரையாற்றி வருகின்றனர். வாக்குப்பதிவை அதிகரிக்க தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    மகாராஷ்டிராவில் ஏப்ரல் 11, 18, 23, மற்றும் 29 ஆகிய தேதிகளில் 4 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் மொத்தம் 8 கோடியே 73 லட்சத்து 29 ஆயிரத்து 910 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 4 கோடியே 57 லட்சத்து 1877 பேர் உள்ளனர். ஆண் வாக்களர்களுக்கு நிகராக பெண் வாக்காளர்கள் 4 கோடியே 16 லட்சத்து 25 ஆயிரத்து 950 பேர் உள்ளனர்.



    மேலும் இந்த ஆண்டு தேர்தலில், 1000 ஆண் வாக்காளர்களுக்கு 911 பெண் வாக்காளர்கள் என்ற அளவில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதையடுத்து அனைத்து பெண்களும் தவறாமல் ஓட்டு போட ஊக்கம் அளிக்கும் வகையில், அம்மாநில தேர்தல் ஆணையம், சகி மத்தன் கேந்திராஸ் எனும் திட்டத்தின் கீழ், பெண்கள் மட்டுமே பணிபுரியும் வாக்குச்சாவடிகளை அமைக்க உள்ளது. 48 தொகுதிகளிலும் தலா ஒரு மகளிர் வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது. மேலும் இப்பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பெண் வாக்காளர்களை கவரும் வகையில், வாக்குச்சாவடிகளை சுத்தமாக வைத்திருந்து, ரங்கோலி உள்ளிட்ட சில கலை வேலைப்பாடுகளால் அலங்கரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. #WomenWorkersBooths
    ×